நியூசிலாந்து – இந்தியா ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றியது

நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, இந்தியா 0-3 என்ற கணக்கில் கைப்பற்றியது.

நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஆட்டத்தில் 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற நியூசிலாந்து இந்தியாவை முதலில் துடுப்பாட அழைத்தது.

இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 385 ரன்கள் எடுத்தது.

இதில் அணியின் கேப்டன் ரோகித் சர்மா 101 ரன்களும், ஷுப்மான் கில் 112 ரன்களும் எடுத்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 41 ஓவர்கள் 2 பந்துகளில் 295 ரன்கள் எடுத்தது.