2026ஆம் ஆண்டுக்கான லங்கா ப்ரீமியர் லீக் (LPL) தொடருக்கான வெளிநாட்டு வீரர்களின் பதிவுகள் எதிர்வரும் மே 08ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது.
இந்த டி20 லீக்கின் ஆறாவது பதிப்பு, எதிர்வரும் ஜூலை மற்றும் ஒகஸ்ட் மாதங்களில் நடைபெறவுள்ளது.
குறித்த தொடரை கொழும்பில் உள்ள SSC மற்றும் ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானம் (RPICS), பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம் (PICS), மற்றும் தம்புள்ளையில் உள்ள ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானம் (RDICS) ஆகிய 4 மைதானங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.