ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இதுவரை 47 போட்டிகள் நிறைவடைந்துள்ளன.
இன்று செவ்வாய்க்கிழமை டெல்லியில் நடைபெறும் 48-லீக் போட்டியில் டெல்லி, சென்னை அணிகள் மோதுகின்றன.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி, டெல்லி அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரராக கே.எல்.ராகுல் களமிறங்கினார்.
இந்நிலையில், கே.எல்.ராகுல் 12 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இவர் ஐபிஎல் தொடரில் அதிக ஓட்டங்களை எடுத்து செம்மஞ்சள் தொப்பியை கைப்பற்றி உள்ளார்.
இவர் 10 ஆட்டங்களில் 445 ஓட்டங்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார்.
இரண்டாவது இடத்தில் அபிஷேக் சர்மா 440 ஓட்டங்களையும், 3வது இடத்தில் ஹென்ரிச் கிளாசன் 425 ஓட்டங்களையும் குவித்துள்ளனர்