இணையதள மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட 19 சீன பிரஜைகளின் கடவுச்சீட்டுகளை விடுவிப்பதற்காக, தலா 3 இலட்சம் ரூபாய் வீதம் லஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.