நடப்பு சாம்பியன்களான ஆர்.சி.பி. அணி, இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள ஐ.பி.எல். 2026 தகுதிச்சுற்று 1 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப்போட்டியில், ஃபில் சால்ட் விளையாடுவாரா இல்லையா என்பது மிகப்பெரும் கேள்வியாக இருக்கிறது.
காயமடைந்த விரலுக்கு சிகிச்சை பெற்று சமீபத்தில் இங்கிலாந்தில் இருந்து திரும்பிய தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட் பங்கேற்பாரா என்பது குறித்துக் கேட்கப்பட்டபோது, ஆர்.சி.பி. அணி தலைவர் ரஜத் பட்டிதார் அதற்கு நேரடியான பதில் அளிக்கவில்லை.
இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த ரஜத் பட்டிதார், “அவர் உடற்தகுதியுடன் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார், ஆனால் நாங்கள் இன்னும் ஆடும் லெவனை முடிவு செய்யவில்லை,” என்று அவர் தெரிவித்துள்ளார்.