ரோகித் சர்மா – புதிய சாதனை

இந்தியா, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

முதலில் துடுப்பெடுத்து ஆடிய அவுஸ்திரேலியா 269 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.. அதிக பட்சமாக மிட்செல் மார்ஷ் 47 ஓட்டங்கள் எடுத்தார்.

அடுத்து துடுப்பெடுத்தாடிய இந்தியா 248 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. விராட் கோலி அரை சதமடித்து 54 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, அவுஸ்திரேலியா அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றுஇ தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

இந்தப் போட்டியில், ரோகித் சர்மா 17 பந்துகளில் 2 சிக்சர்இ 2 பவுண்டரி உட்பட 30 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஆசியாவில் 10,000 ஓட்டங்களை கடந்த 8-வது இந்தியர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்