இலங்கை – இந்தியா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ஆரம்பம்

சுற்றுலா இலங்கை அணிக்கும் இந்தியாவுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர் தசுன் ஷனக முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

இந்தியாவின் கவுகாத்தியில் தொடங்கிய இந்தப் போட்டியில் இந்திய அணியை ரோஹித் சர்மா வழிநடத்துவார், மேலும் காயமடைந்த ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

இன்றைய போட்டியில் அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் இளம் சகலதுறை ஆட்டக்காரர் டுனிட் வெல்லாலகே ஆகியோர் விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

India Vs Sri Lanka 1st ODI

கவுகாத்தி மைதானத்தில் இதற்கு முன் ஒரே ஒரு போட்டி மட்டுமே நடந்துள்ளது, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான அந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான கடந்த 26 ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி 05 போட்டிகளில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளது.