ஐபிஎல் அணிகளிடம் தற்போது மீதம் இருக்கும் பணம்

நடக்கவிருக்கும் ஐபிஎல்யின் 16ஆவது சீசனிற்கான மினி ஏலம் வருகிற டிசம்பர் 23ஆம் திகதி நடக்கிறது. இதற்கு முன்னர் இன்று மாலை 6 மணிக்குள் அனைத்து அணிகளும் எந்தெந்த வீரர்களை தக்கவைக்கிறார்கள். எந்தெந்த வீரர்களை விடுவிக்கிறது என்ற விவரத்தை வெளியிட அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதனால் அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளனர். தாங்கள் விடுவித்துள்ள வீரர்களின் தொகையையும் சேர்த்து, அனைத்து ஐபிஎல் அணிகளிடமும், எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை பொறுத்து தான் நடக்கவிருக்கும் ஐபிஎல் ஏலத்தில், அந்த அணிகள் வீரர்களை வாங்க முடியும்.

அப்படி அவர்களிடம் எவ்வளவு தொகை உள்ளது என்ற தகவல் வருமாறு,

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ரூ. 42.25 கோடி
பஞ்சாப் கிங்ஸ் ரூ. 32.20 கோடி
மும்பை இந்தியன்ஸ் ரூ. 20.55 கோடி
சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 20.45 கோடி
டெல்லி கேப்பிடல்ஸ் ரூ. 19.45 கோடி
குஜராத் டைட்டன்ஸ் ரூ. 19.25 கோடி
ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ. 13.20 கோடி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ரூ. 8.75 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ. 7.05 கோடி
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ரூ. 23.35 கோடி