மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தில் பலா மரக்கன்றுகள் நடுகை

நாட்டில் உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கம் மற்றும் 75 வது ஆண்டு சுதந்திர தினம் ஆகியவற்றை முன்னிட்டு பலா மரக்கன்றுகள் மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தில் திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்களினால் நடப்பட்டது.

அதன் ஒரு கட்டமாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரனின் வழிகாட்டலுக்கு இணங்க, மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ. சுதாகரனின் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை இந்நிகழ்வு இடம்பெற்றது.

அதன்படி, மாவட்ட செயலக திட்டமிடல் பிரிவின் உத்தியோகத்தர்கள் தமக்குக் கிடைத்த மரங்களை மாவட்ட செயலக வளாகத்தில் நடுகை செய்தமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்கு இணங்க, மாவட்டத்தின் உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சுமார் 1400 பலாமரக் கன்றுகள் விநியோகிக்கப்பட்டு, அவை மாவட்டத்தின் பல இடங்களில் நடப்பட்டு வருகின்றமையை அவதானிக்கலாம் .