வாழும் தெய்வங்களாக உயர்ந்து நிற்கும் அன்னையர் அனைவரையும் சர்வதேச அன்னையர் தினத்தில் வாழ்த்தி மகிழ்கிறது புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி.
இத் தினத்தில் இவ் அமைப்பு, கலை, இலக்கிய, சமூக மேம்பாட்டு படைப்பாக்கங்களை மேம்படுத்தும் நோக்கில் புதிய வேலைத்திட்டம் ஒன்றையும் அறிமுகம் செய்கின்றது.
மகளிர் மேம்பாடு குறித்த ஆக்கங்களை குறிப்பாக கதை, கட்டுரை,கவிதை மற்றும் மகளிர் குறித்த சுவாரசிய தகவல்களை எழுதி அனுப்பி வைக்குமாறு மகளிர்களிடம் கோரிக்கை விடுக்கின்றது.
மேற்படி அமைப்பின் நிறுவனரும் சிரேஷ்ட பத்திரிகையாளருமான ராதாமேத்தாவின் வழிகாட்டுதலின் கீழும், முன்னாள் மித்திரன் பத்திரி கையின் ஆசிரியையான திருமதி சூரியகுமாரியின் ஆலோசனைகளோடும் இப்பணி ஆரம்பமாகவுள்ளது.
படைப்பாக்க ஆர்வ முள்ள மகளிர் இதன் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள உடன் 075 4880172 என்ற வட்சப் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.