லங்கா சதோசா நிறுவனம் அத்தியாவசிய நுகர்வோர் பொருட்கள் 9 வகைகளின் விலையை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய விலைகள் ஜூன் 18 (வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அறிவுறுத்தலின் பேரில் இந்த விலை குறைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய விலைக் குறைப்பின்படி கோதுமை மாவின் விலை கிலோவுக்கு ரூ.10 குறைக்கப்பட்டு ரூ.169 இலிருந்து ரூ.159 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதுவே அதிகளவான விலை குறைப்பாகும்.
அதேபோல் பல்வேறு அரிசி வகைகளின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன. பொன்னி சம்பா ரூ.6, சிவப்பு நாட்டு அரிசி ரூ.5, சம்பா சிவப்பு கெக்குலு ரூ.5, உள்ளூர் வெள்ளை நாட்டு அரிசி ரூ.5, வெள்ளை கெக்குலு சம்பா ரூ.5 மற்றும் வெள்ளை கெக்குலு அரிசி ரூ.3 என கிலோவுக்கு குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் கடலை கிலோவுக்கு ரூ.5 மற்றும் வெள்ளை சர்க்கரை கிலோவுக்கு ரூ.2 விலைக் குறைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் லங்கா சதோசா தெரிவித்துள்ளது.
