வலான மத்திய ஊழல் மற்றும் ஒழுக்கக்கேடு தடுப்பு பிரிவு (Central Anti-Vice Strike Force) தலவத்துகொடை பகுதியில் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் சட்டவிரோதமாக இயங்கிய ஒன்பது விபச்சார விடுதிகளை சுற்றிவளைத்து சோதனை நடத்தியுள்ளது.
இந்த நடவடிக்கையின் போது 34 பெண்கள் உட்பட மொத்தம் 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மசாஜ் நிலையங்கள் என்ற பெயரில் சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இடங்களே இந்த சுற்றிவளைப்பில் இலக்காகக் கொள்ளப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.