கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் தேசிய வாசிப்பு மாத நிகழ்வு

-வாழைச்சேனை-

தேசிய வாசிப்பு மாதம் ஓக்டோபர் 2022 யினை முன்னிட்டு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் நிர்வாகத்திற்குட்பட்ட பொது நூலகங்களில்  அறிவார்ந்த சமூகத்திற்கான வாசிப்பு  என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட நிகழ்ச்சி திட்டங்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு சனிக்கிழமை ஓட்டமாவடி பல நோக்கு கூட்டுறவு சங்க கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மீராவோடை பொது நூலக நூலகர் க.ருத்திரன் தமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் பிரதம அதியாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நெபர் கலந்து கொண்டார்.

கௌரவ அதியாக உப தவிசாளர் ஏ.ஜி.அமீர் உட்பட சபை உறுப்பினர்கள கலந்து கொண்டார்கள்.

விசேட அதிதிகளாக சனசமூக நிலைய உத்தியோகஸ்த்தர்  உருத்திரகாந்தன் சேக்கிள் இளம் பெண்கள் அமைப்பினர் கதிரவன்பட்டிமன்ற பேரவையின் தலைவர் த.இன்பராஜா மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மாவட்டத்தின் சிறப்பாக முன்னெடுக்கப்பட்ட குறித்த நிகழ்வானது அதிதிகள் மலர்மாலை அணிவித்து முன்பள்ளி மாணவர்களின் பேண்ட் வாத்திய இசையுடன் வரவேற்கப்பட்டனர்.

தொடர்ந்து இறைவணக்கத்துடன் ஓட்டமாவடி பொது நூலக நூலகர் எம்.எவ்.பாத்திமாபானுவின் வரவேற்பு உரையுடன் நிகழ்வுகள் யாவும் ஆரம்பிக்கப்பட்டது.

அல் அனிக்கா,  உதுமான், மயிலங்கரச்சை பாரதி முன் பள்ளி மாணவர்களின் கலாச்சார நடன நிகழ்வுகள் நடைபெற்றது.

தொடர்ந்து ஆசிய மன்றத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட 8 இலட்சம் ரூபா பெறுமதியான நூல்கள் சபையின் நிர்வாகத்திற்குட்பட்ட 6 நூலகங்களுக்கும் கையளிக்கப்பட்டது.

போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. சிறந்த வீட்டுத்தோட்ட பயிர்செய்கையாளர்கள் சிறந்த வாசகர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

நூலகத்தினை பயன்படுத்தியும் இம்முறை க.பொ.த சாதாரண பரீட்சையில் தோற்றி 9 ஏ சித்தி பெற்ற ஓட்டமாவடி மத்திய கல்லூரி மாணவன் ஏ.எம்.மின்ஜாஜ் தவிசாளரின் சொந்த நிதி பங்களிப்பு வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டார்

சிற்றி காடன் நிறுவனத்தினால் சபை முன்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பலன் தரும் மரங்கன்றுகளை சிறந்த முறையில் பராமரித்தோருக்கான விசேட பரிசில்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வின் சிறப்பு நிகழ்சியாக மட்டக்களப்பு கதிரவன் பட்டிமன்ற பேரவையினால் 102 அவது சிறப்பு பட்டிமன்ற நிகழ்வான  அறிவார்ந்த சமூகத்திற்கான வாசிப்பு  தொடர்கிறதா? இடர்கிறதா? என்ற தலைப்பில் த.இன்பராஜா தலைமையில் நடைபெற்றது.

அத்துடன் அவர்களினால் நகைச்சுவை நாடகமும் நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டவர்களிடம் குறித்த நிகழ்வுகள் அமோக வரவேற்பை பெற்றது.

சேக்கிள் இளம் பெண்கள் அமைப்பினர் மற்றும் கதிரவன் பட்டிமன்ற பேரவையினர் மாவட்டத்திற்கு ஆற்றி வரும் சேவையினை பாராட்டி சேவை நலன் பாராட்டு நினைவு சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மேற்படி நிகழ்வுகள் யாவும் தேசிய வாசிப்பு ஓக்டோபர் மாத 2022 நிகழ்வினை முன்னிட்டு தேசிய நூலக ஆவணவாக்கல் சபையின் ஆலோசனைக்கிணங்க தவிசாளரின் வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.