கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

-வாழைச்சேனை நிருபர்-

 

மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடம் கல்வி சமூக நலன் பண்பாடு அறப்பனி மையத்தால் மட்டக்களப்பு மாவட்ட வந்தறுமூலை கிராமத்தில் அமைந்துள்ள அகஸ்தியர் அறநெறி பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது கவ்வி கற்கும் 85 மாணவர்களுக்கு அவர்களின் நலன் கருதி புத்தகப்பை, அப்பியாசக்கொப்பி, பேனை, பென்சில் என்பன வழங்கி வைக்கப்பட்டது.

இதற்கான நிதி பங்களிப்பை காரைநகர் முல்லைப்பிலவை பிறப்பிடமாகவும் சுவிஸ் நாட்டில் வசித்து அமரத்துவம் அடைந்த அமரர் பொன்னுத்துரை கணேஸ் அவரது 1வது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு அவரது குடும்பத்தினர் வழங்கி வைத்தனர்.

அத்துடன் திருமதி சக்தி அன்னபூரணி செல்வரத்தினம்  நிதி பங்களிப்பு வழங்கியிருந்தனர்.

இன் நிகழ்வில் கிராம உத்தியோகத்தர்  மோகனாகுமார் மதகுரு சிவஸ்ரீ மனோராஜ் குருக்கள் அறப்பனி மைய பொறுப்பாளர் பாக்கியராசா வினோராஜ் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் சக்தி தொண்டர்கள் பங்குபற்றியிருந்தனர் .

கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு