வன்முறைகளை முடிவுக்கு கொண்டு செல்வதற்கான செயலமர்வு
-திருகோணமலை நிருபர்-
ஒன்றிணைவோம் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவிற்கு கொண்டு வருவதற்கான 16 நாள் செயன்முனைவு எனும் திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு இன்று சனிக்கிழமை திருகோணமலை தனியார் விடுதியில் இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்ட பெண்கள் வலயமைப்பு இதனை ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது பெண்கள் எதிர்நோக்கும் வன்முறைகள்இ வன்முறைகளை எதிர்நோக்கும் பெண்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், பாதிக்கப்படும் பெண்களுக்கு ஊடகவியலாளர்கள் எவ்வாறு குரல் கொடுக்க முன்வர வேண்டும் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.
இச்செயலமர்வில் விசேட வளவாளராக யாழ் பல்கலைகழக அரசவியல் துறை விரிவுரையாளரும் ஊடகவியலாளருமான அமிர்தநாயகம் நிக்ஸன் வழங்கியிருந்தார்.
இச் செயலமர்வில் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.அருள்ராஜ், திருகோணமலை பட்டணமும் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், திருகோணமலை மாவட்ட பெண்கள் வலயமைப்பின் இயக்குனர் சட்டத்தரணி செல்வி பிரசாந்தினி, அகம் மனிதாபிமான வலயமைப்பின் இணைப்பாளர் கண்டுமனி லவகுசராசா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.