மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வருட இறுதி கணக்காய்வு முகாமைத்துவ கூட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வருட இறுதி கணக்காய்வு முகாமைத்துவ கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
கணக்காய்வுகள் மேற்கொள்ளும்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள், தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன், துறைசார் அதிகாரிகளினால் அவற்றிற்கான தீர்வுகளும் இதன்போது முன்வைக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலின் போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நவருபரஞ்சினி முகுந்தன் (காணி), சிரேஷ்ட உதவி கணக்காளர் நாயகம் எம்.பி .ஐ .எம்.ரஷ்மி, கணக்காளர் அத்தியட்சகர் ஏ.எம்.மாஹீர், பிரதம உள்ளக கணக்காளர் திருமதி.ஆர்.காயத்திரி, மாவட்ட செயலக பிரதம கணக்காளர் திருமதி. இந்திராவதி மோகன், மற்றும் பிரதேச செயலாளர்கள், அரச திணைக்களங்களின் தலைவர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், உயரதிகாரிகள் என பலர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.