17 அமைச்சர்கள் பதவியேற்றனர்

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 17 பேர் பதவியேற்றுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று திங்கட்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் பதவியேற்கும் நிகழ்வு இடம்பெற்றது.

அதன்படி,

தினேஷ் குணவர்தன –  பொதுசேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சர்

டக்ளஸ் தேவானந்தா – மீன்பிடித்துறை அமைச்சர்

ரமேஷ் பத்திரண – கல்வி மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்

பிரசன்ன ரணதுங்க – பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்

திலும் அமுணுகம – போக்குவரத்து மற்றும் கைத்தொழில் அமைச்சர்

கனக்க ஹேரத் – பெருந்தெருக்கள் அமைச்சர்

விதுர விக்கிரமநாயக்க – தொழில் அமைச்சர்

ஜானக்க வக்கும்புர – விவசாயம் மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர்

ஷெஹான் சேமசிங்க – வர்த்தகம் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சர்

மொஹான் பிரியதர்ஷன டி சில்வா – நீர்வழங்கல் அமைச்சர்

விமலவீர திசாநாயக்க – வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர்

கஞ்சன விஜேசேகர – வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர்

தேனுக விதானகமகே – இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்

கலாநிதி நாலக்க கொடஹேவா – ஊடகத்துறை அமைச்சர்

பேராசிரியர் சன்னஜயசுமன – சுகாதார அமைச்சர்

ஹாஃபீஸ் நசீர் அஹமட் – சுற்றாடல் அமைச்சர்

பிரமித்த பண்டார தென்னக்கோன் – துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர்