-மூதூர் நிருபர்-
மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஆலிம்நகர் பகுதியிலுள்ள வீடொன்றில், விற்பனைக்காக வைத்திருந்த ஐஸ் போதைப் பொருளுடன், தம்பதியினர் மூதூர் போதை ஒழிப்பு பிரிவு பொலிஸாரால், நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட கணவன் மற்றும் மனைவியிடமிருந்து, 3 கிராம் 100 மில்லி கிராம், 250 மில்லி கிராம் நிறையுடைய ஐஸ் போதைப் பொருள், கையடக்க தொலைபேசி, ஏழு இலட்சம் ரூபாய் பணம் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும், மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.