வெறிச்சோடிக் காணப்படும் மட்டக்களப்பு நகர்

இன்று மே 1 ஆம் திகதி தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு கட்டக்களப்பு நகரில் வர்த்தக நிலையங்களும் அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளது.

வீதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றது.

மட்டக்களப்பு நகர் பகுதியில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ள நிலையில் உள்வீதிகளில் சில வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டு இருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது.

தொழிலாளர் தினத்தன்று அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடி தொழிலாளர்களுககு மதிப்பளிக்குமாறு மட்டக்களப்பு வர்த்தக சங்கம் நேற்று அறிவித்தல் ஒன்றை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்