கில் இரட்டை சதம் – இந்திய அணி அபாரம்
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 587 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
தடுப்பாட்டத்தில் இந்திய அணித்தலைவர் சுப்மன் கில் இரட்டை சதம் விளாசினார்.
இந்தநிலையில் இங்கிலாந்து அணி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடவுள்ளது.