-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் உள்ளவர்கள் மகளை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக கொழும்பிற்கு சென்றுள்ளனர்.
இதன்போது வீட்டை உடைத்து உள்ளே சென்ற திருடர்கள், மிளகாய் தூள், சரக்குத்தூள், பயிற்றம் உருண்டைகள், மூன்று கோழிகள், கால் பவுண் தோடு, ஒரு மூக்குத்தி, ஒரு தொகை பணம் மற்றும் பித்தளை அட்டியல் போன்றவற்றை திருடிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் கொழும்பு சென்றவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தவேளை வீடு உடைக்கப்பட்டு மேற்படி பொருட்கள் களவாடப்பட்டு இருந்ததை அவதானித்தனர்.
இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.