கற்குவாரியில் மண்சரிவு ; போக்குவரத்துக்கு பாதிப்பு

மாத்தளை- வட்டகொட பிரதான வீதியின் அமைந்துள்ள கற்குவாரியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளமையினால் குறித்த வீதியுடனான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக இப்பகுதியில் பெய்து வரும் கடும்மழையினால் கற்கள் சரிந்து வருவதால் வீதி மூடப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு, மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாலக பண்டாரவால் சம்பந்தப்பட்ட பிரிவினரின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

அதற்கமைய அனர்த்தக முகாமைத்துவ மத்திய நிலையம், பிரதேச செயலகம், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து வீதியில் உள்ள கற்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்