ஐந்தில் ஒரு பெண் துஷ்பிரயோகத்திற்கு ஆளாவதாக தகவல்

இலங்கையில் ஐந்தில் ஒரு பெண் தனது வாழ் நாளில் ஒருமுறையாவது தனது துணையால் உடல் ரீதியாக அல்லது பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது.

இந்த உடல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம், தங்கள் கணவர், இணைந்து வாழும் துணை அல்லது காதலன் என நெருங்கிய கூட்டாளிகளிடம் இருந்து நிகழ்ந்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் கொழும்பு அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை நடத்திய மகளிர் நல ஆய்வு முடிவு மூலம் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

இந்த கணக்கெடுப்பின் தரவுகளின் பகுப்பாய்வு, இதுபோன்ற உடல் ரீதியான துஷ்பிரயோகங்களை அனுபவித்த பெரும்பாலான பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது. பெண்களைக் கட்டுப்படுத்துவதில் அவர்களின் பங்கு தாரரின் செல்வாக்கு, 19.1 சதவீதமாக கண்டறியப்பட்டது.