தேசிய டெங்கு வாரத்தினை முன்னிட்டு மூதூர் பிரதேசத்தில் நுளம்பின் தாக்கத்தை கட்டுப்படுத்த பொது இடங்களில் கண்காணிப்பு மற்றும் சிரமதானப் பணி இன்று செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
மூதூர் பிரதேசத்திலுள்ள பொது இடங்களான பொது மைதானம், பொழுதுபோக்கு பூங்கா, பஹ்ரியா கடற்கரை மற்றும் தாஹா நகர் கிராமத்திலும் கண்காணிப்பு மற்றும் சிரமதானப் பணிகள் அரச உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்டதுடன் பிலாஸ்ரிக் போத்தல்களை சேமிப்பதற்கான தொட்டியும் பொது மைதானந்தில் வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மூதூர் பிரதேச செயலாளர் எம். ஐ. பிர்னாஸ் ,தவிசாளர் எஸ். பிரகலாதன் , சுகாதார வைத்திய அதிகாரி என். எம். கஸ்ஸாலி ,, உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ்.எப்.றொஸானா , பிரதேச சபை செயலாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், சமுர்த்தி தலைமை முகாமையாளர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச சபை சுகாதார பணியாளர்களும் கலந்து கொண்டு சிரமதானம் மற்றும் கண்காணிப்பு பணியையும் மேற்கொண்டனர்.