இவ்வருடத்தில் இதுவரை 14 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நடப்பாண்டில் இதுவரை 25,846 டெங்கு நோய்த் தொற்றுகள் பதிவாகியுள்ளன.
மழை மற்றும் நுளம்புகளின் இனப்பெருக்கத்திற்குச் சாதகமான சுற்றுச்சூழல் நிலவுவதே இந்த அதிகரிப்புக்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் வேண்டுகேள் விடுக்கப்பட்டுள்ளது.