சிவனொளி பாதமலை பருவ காலம் கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பௌர்ணமி நாளில் ஆரம்பமானது.
தொடர்ந்து ஆறு மாதங்களாக இப் பருவகாலம் இடம் பெற்று வந்த நிலையில், இம்மாதம் 30 மற்றும் 31 திகதிகளில் வரும் வைகாசி விசாகம் பௌர்ணமி நாளில் நிறைபெற உள்ளது.
எதிர் வரும் வைகாசி விசாகம் பௌர்ணமி நாளில் 31 ம் திகதி சிவனொளி பாதமலை உச்சியில் இருந்து சமன் தெய்வம் மற்றும் ஆபரணங்கள் பூஜை பொருட்கள் என்பன இரத்தினபுரி பலாபத்பல வழியாகவும், நல்லதண்ணி நோட்டன் வழியாகவும், நல்லதண்ணி பொகவந்தலாவ பலங்கொட வழியாகவும் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எதிர் வரும் வைகாசி மாதம் வைகாசி விசாகம் பௌர்ணமி நாளான 30 ம் திகதி முதல் 31 திகதிகளில் இவ் வருட பருவ காலம் நிறைவடைவதையொட்டி விஷேட பிரித் வைபவம் இடம்பெற உள்ளது.
அன்றைய தினம் சுவாமிகள் நல்லதண்ணி நகருக்கு லக்சபான இராணுவ வீரர்களால் பல்லக்கில் எடுத்து வரப்பட்டு நல்லதண்ணி பௌத்த மத்திய நிலையத்தில் பொதுமக்கள் வழிபாட்டிற்கு வைக்கப்பட்டு, பின்னர் சிவனொளி பாதமலைக்கு பொறுப்பான பெங்கமுவ தம்மதின்ன மஹநாயக்க தேரர் அவர்களின் வழிகாட்டலில் சுவாமி பூஜை பொருட்கள் மற்றும் ஆபரணங்கள் மூன்று வழிகளில் மிகவும் பாதுகாப்பான முறையில் எடுத்து செல்ல பட்டு, இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள கல்பொத்தாவில ரஜமஹா விகாரையில் பிரதிஷ்டை செய்ய பட உள்ளது என, சிவனடி பாத மலைக்கு பொறுப்பான பெங்கமுவ தம்மதின்ன மஹநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.