பாதாள உலகக் குழுவின் தலைவராக செயற்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி தமரா குமாரி அபேரத்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதற்கமைய, அவரை எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
தடுப்பு காவல் உத்தரவுக்கான காலஅவகாசம் நிறைவடைந்துள்ள நிலையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் இன்று திங்கட்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.