ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகவியலாளர்கள் உட்பட 10 பேர் காயம்

மிரிஹான பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் இதுவரை 6 பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் நான்கு நோயாளிகள் களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் ஆண்கள் என்றும் இவர்களில் பலர் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.