அரசியலமைப்பு சபைக்கு (Constitutional Council) மூன்று சிவில் சமூகப் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பாக பிரதமருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இந்த இணக்கப்பாட்டின் அடிப்படையில், பின்வரும் மூவர் அரசியலமைப்பு சபையின் சிவில் சமூகப் பிரதிநிதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
• பேராசிரியர் வசந்தா செனவிரத்ன
• ஒஸ்டின் பெனாண்டோ
• ரஞ்சித் ஆரியரத்ன
அனுலா விஜேசுந்தர, பிரதாப் ராமானுஜம் மற்றும் தினேஷா சமரரத்ன ஆகியோரின் பதவிக்காலம் கடந்த 16ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.
இதனைத் தொடர்ந்து புதிய நியமனங்கள் குறித்து பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு இடையில் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.