-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்தில், பிறந்து 24 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று நேற்று புதன்கிழமை உயிரிழந்துள்ளது.
பிரான்பற்று – பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த லோகிதன் ரிராஜ் என்ற ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குறித்த குழந்தைக்கு காய்ச்சலுடன் வலிப்பு ஏற்பட்டது, இதன்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை குழந்தை அங்கேயே உயிரிழந்துள்ளது.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.