கருக்கலைப்பு செய்த காதலிக்கு நேர்ந்த கதி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த நபர் கருக்கலைப்பு செய்த காதலியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார்.

கேப்ரியல்லா கொன்சேல்ஸ் (வயது – 22) என்பரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

டெக்சாசில் இருந்து 800 மைல் தூரத்தில் அமைந்திருக்கும் கொலராடோவிலேயே கொன்சேல்ஸ் கருக்கலைப்பு செய்து கொண்டார். கொலராடோவில் கருவுற்ற பெண்கள், எந்த நிலையில் இருந்தாலும் கருக்கலைப்பு செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு இருக்கின்றது.

கொலை செய்யப்பட்ட நாளன்று கொன்சேல்ஸ் ஐ சந்தித்த தாம்ப்சன் அவரிடம் சிறுது நேரம் பேசிக் கொண்டிருந்த பின் தாம்ப்சன், கொன்சேல்ஸ் கழுத்தை நெறிக்க தொடங்கியுள்ளார். கொன்சேல்ஸ் அவரை தள்ளிவிட்டு அங்கிருந்து நடந்து செல்ல முயன்றிருக்கிறார். அப்போது தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்த தாம்ப்சன் கொன்சேல்ஸ் தலையில் சுட்டு கொலை செய்துள்ளார்.

இதற்கு முன்னரும் பல சமயங்களில் தாம்ப்சன் கொன்சேல்ஸ் ஐ தாக்கி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

காதலியை கொலை செய்த தாம்ப்சனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்