இரண்டு மனைவிகளுடன் அட்டவணை போட்டு வாழும் கணவன்

இந்தியா – ஹரியானாவில் இரண்டு மனைவிகளைத் திருமணம் செய்த கணவருடன் அட்டவணை போட்டு வாழ மனைவிகள் ஒப்புக்கொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சீமா என்ற பெண் 2018-ம் ஆண்டு ஹரியானாவைச் சேர்ந்த இன்ஜினீயர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இரண்டு ஆண்டுகள் இருவரும் சேர்ந்து வாழ்ந்துவந்த நிலையில், கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் அவரின் கணவர் வேலை நிமித்தமாக சீமாவை அவரின் பெற்றோர் வீட்டில் விட்டுச் சென்று குருகிராம் என்ற இடத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

அப்போது, அலுவலகத்தில் வேறோரு பெண்ணுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவரை முதல் மனைவியான சீமாவுக்கு தெரியாமல் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்துள்ளார் குறித்த நபர். இந்நிலையில் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, முதல் மனைவிக்கு விவரம் தெரியவந்து, கணவனிடம் ஜீவனாம்சம் கேட்டுள்ளார். கணவரிடம் ஜீவனாம்சம் கொடுக்க பணம் இல்லை என்று கூறிய நிலையில், மனைவிகள் இருவரும் பேசி ஒரு முடிவுக்கு வந்துள்ளனர்.

இதன்படி, வாரத்தில் தலா மூன்று நாள்களை இரு மனைவிகளுடனும் கணவர் செலவிட வேண்டும். மீதமிருக்கும் ஒரு நாளை கணவர் விரும்பும் மனைவியுடன் தங்கிக்கொள்ளலாம். இதற்காக இரண்டு மனைவிக்கும் குருகிராமில் தனித்தனி வீட்டை கணவர் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்றும் முடிவுசெய்யப்பட்டுள்ளதாக, இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.