நாடு முழுவதும் 699 பேருக்கு கொரோனா உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 699 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 96 ஆயிரத்து 984 ஆக அதிகரித்துள்ளது.

இந்த புதிய பாதிப்புகளில் வெறும் 5 மாநிலங்கள் இருந்து மட்டும் 75%க்கும் அதிகமான அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம், கடந்த 24 மணி நேரத்தில் 435 பேர் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதன் மூலம்இ இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 4 கோடியே 41 லட்சத்து 59 ஆயிரத்து 617 பேர் ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், நோய் தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையை விட நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால்இ சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் தினசரி பாதிப்பு விகிதம் (Daily positivity rate) 0.71% ஆகவும் வாராந்திர பாதிப்பு விகிதம் 0.91% (Weekly positivity rate) ஆகவும் உள்ளது. அதே சமயம் டெல்லியில் இந்த விகிதம் 7% ஆகவும், கோவாவில் இந்த விகிதம் 7% ஆகவும் உள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்