துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல் பாகங்கள் பொலித்தீன் பையில்

இந்தியா – டெல்லியின் தென் கிழக்குப் பகுதியில் மெட்ரோ பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. அங்கு சராய் காலே கான் ISBT பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் பொலித்தீன் பையில் பெண்ணின் உடல் பாகங்கள் தெரிந்த நிலையில் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது..

அதனைத் தொடர்ந்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை நடத்தியதில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் அழுகிய நிலையில் பொலித்தீன் பையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் தலை எலும்புக்கூடான நிலையில் வெள்ளை பொலித்தீன் பையில் இருந்துள்ளது.

உடல் பாகங்களைக் கைப்பற்றிய பொலிஸார், எய்ம்ஸ் Trauma மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தடயவியல் நிபுணர் குழு உடல் பாகங்கள் கைப்பற்றிய இடங்களில் சோதனையை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, கொல்லப்பட்ட பெண் யார் என்பதைக் கண்டறியும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்