லாவோஸ் நாட்டில் தங்கம் தேடி குகைக்குள் சென்று சிக்கியவர்கள் ஒரு வாரத்திற்கு பின் மீட்கப்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்நாட்டின் Xaisomboun மாகாணத்தில் உள்ள குகைக்குள் தங்கம் தேடி 7 பேர் கடந்த வாரம் சென்றனர்.
சில மணி நேரத்தில் அந்தப் பகுதியில் கனமழை பெய்து குகைக்குள் இருந்து வெளியே வருவதற்கான பாதையை நீர் சூழ்ந்தது. இதனால் குகைக்குள் சென்றவர்கள் அங்கேயே சிக்கிக்கொண்டனர். அவர்கள் கண்ணீருடன் தங்களை மீட்கக் கோரி வெளியிட்ட வீடியோ சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
இதனையடுத்து லாவோஸ் நாட்டு மீட்புப் படையினர் அவர்களைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனர். தாய்லாந்து நாட்டின் மீட்புப் படையும் அவர்களுடன் இணைந்துகொண்டது. தாய்லாந்து நாட்டில் 2018 ஆம் ஆண்டு 12 பாடசாலை மாணவர்கள் குகைக்குள் சிக்கியபோது அவர்களைப் பாதுகாப்பாக மீட்பதில் இந்தக் குழு முக்கிய பங்காற்றி இருந்தது.
இவர்களின் முயற்சியால் 7 பேரில் 5 பேர் மீட்கப்பட்டனர். 2 பேரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. (Image : AI Generated)