இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் மூடப்படாத நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் நேற்று செவ்வாய்க்கிழமை 8 வயது சிறுவன் தவறி விழுந்துள்ளார்.
உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பொலிஸார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிறுவன் தற்போது 43 அடி ஆழத்தில் சிக்கியுள்ளதாகவும் ஆழ்துளை கிணற்றுக்குள் ஒக்சிஜன் வழங்கப்பட்டு சிறுவனின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் மற்றொரு குழி தோண்டப்பட்டு சிறுவனை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.