அமிதாப் பச்சன் தொடர்பான விடயங்களை பயன்படுத்த தடை உத்தரவு
இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் பெயர், புகைப்படம் மற்றும் குரல் ஆகியவற்றை அனுமதியின்றி பயன்படுத்த முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமிதாப் பச்சன் தனது பெயர், உருவம் மற்றும் குரல் மற்றும் அவரது ஆளுமை ஆகியவற்றைப் பாதுகாக்கும் நம்பிக்கையில் தொடர்ந்த வழக்கைத் தொடர்ந்து, டெல்லி உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.
சூப்பர் ஸ்டார் அம்தாப் பச்சனின் பெயர் மற்றும் புகைப்படங்கள் அவருக்குத் தெரியாமல் பல்வேறு வணிகங்களை விளம்பரப்படுத்த பயன்படுத்தப்பட்டதாக வழக்குகள் பதிவாகியுள்ளன.
மேலும் அதை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க அவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.