சம்மாந்துறை, பழைய வளத்தாப்பட்டி பகுதியில் மாடுகளை மேய்க்க சென்றவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
சம்மாந்துறை, பழைய வளத்தாப்பட்டி கிராமம் 01 பகுதியைச் சேர்ந்த மயில்வாகனம் வாசு (வயது 57) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மரண விசாரணை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதிவானால் முன்னெடுக்கப்பட்டது.
உயிரிழப்பிற்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.