கொழும்பில் உள்ள தாமரை கோபுரம் இன்று சனிக்கிழமை இரவு சிவப்பு, வெள்ளை மற்றும் நீல நிறங்களில் காட்சியளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் 250ஆவது பிறந்ததினத்தையும், Freedom250 இனையும் பிரதிபலிக்கும் வகையில் குறித்த நிறங்களில் மின்விளக்குகள் ஔிரவுள்ளன.
இது தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவிக்கையில், ஜனாதிபதி ட்ரம்ப் கூறியதுபோல், அமெரிக்காவின் கதை அனைவரையும் சுதந்திரமானவர்களாக மாற்றுவதாக தெரிவித்துள்ளது.