திட்வா சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 481 ஆக உயர்ந்துள்ளது.
இன்று வியாழக்கிழமை வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, 345 பேர் இன்னும் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட பல மாவட்டங்களில் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
