கனமழை காரணமாக இறக்குவானை பிரதான பேருந்து நிலையம் மற்றும் இறக்குவானை நகரின் ஒரு பகுதி முழுவதும் இன்று வியாழக்கிழமை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு இறக்குவானை நகரம் நீரில் மூழ்கியதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இறக்குவானையின் சில இடங்களில் 4 அடி உயரத்திற்கு வெள்ள நீர் மட்டம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெள்ளம் காரணமாக இறக்குவானை காவல்துறைக்குச் செல்லும் பிரதான வீதி முழுவதுமாகத் தடைப்பட்டுள்ளது.