பட்டாசு ஆலையில் வெடி விபத்து : சம்பவ இடத்திலேயே உயிரிழந்த தொழிலாளர்கள்

இந்தியா – விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெம்பக்கோட்டை பகுதியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு 8 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 3 தொழிலாளர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.