காசல் போதனா மகளிர் மருத்துவமனையில் குழந்தைகளுக்குப் பாலின மாற்று அறுவை சிகிச்சைகள் செய்வதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகளை மருத்துவமனை நிர்வாகம் நிராகரித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு மருத்துவமனை பணிப்பாளர் வைத்தியர் அஜித் தந்தநாராயண எழுதிய கடிதத்தில் இந்த விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு தொலைக்காட்சி நிகழ்வில் வணக்கத்திற்குரிய எல்லே குணவன்ச தேரர் கூறியதாகக் கூறப்படும் கருத்துக்கள் பின்னர் சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
‘மருத்துவமனையின் பணிப்பாளர் என்ற முறையில், இந்த நிறுவனத்தில் அத்தகைய எந்த நடவடிக்கையும் இடம்பெறவில்லை என்பதை நான் பொறுப்புடன் கூறுகிறேன்,’ என்று வைத்தியர் அஜித் தந்தநாராயண குறிப்பிட்டார்.
மேலும், இவ்விடயம் குறித்த எந்தவொரு விசாரணைக்கும் மருத்துவமனை தயாராக இருப்பதாகவும், பொதுவெளியில் பரப்பப்படும் தவறான தகவல்களைச் சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.