ஆபாச படங்களில் நடித்து இணையத்தில் பதிவேற்றிய இளம் தம்பதியினர் கைது

ஆபாச படங்களில் நடித்து காட்சிகளை இணையத்தில் பதிவு செய்ததாக சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிப்பவர்களிடமிருந்து பெறப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் இளம் தம்பதியினர் ராகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராகம தம்புவ பிரதேசத்தை சேர்ந்த 19 மற்றும் 24 வயதுடைய இளம் தம்பதியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணைகளின் போது, ​​ஆரம்பத்தில் வெல்லம்பிட்டியில் வசித்து வந்ததாகவும் பின்னர் ராகமவில் உள்ள குறித்த பெண்ணின் தாயார் வீட்டில் வைத்து இணைத்தில் ஆபாச படங்களை பதிவேற்றி பணம் சம்பாதித்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.

வேலையின்றி வாடகை வாகனங்களில் பயணித்து வெளியில் உள்ள விடுதிகளில் உணவு, பானங்களை ஆர்டர் செய்து காலத்தை கடத்தும் இந்த தம்பதியினரின் சந்தேகத்திற்குரிய நடத்தை காரணமாக, அவர்கள் பயன்படுத்திய சாதனங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இணையம் தொடர்பான அரச அதிகாரிகளுடன் இணைந்து ராகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்