காதலனை பலவந்தமாகக் கடத்திச் சென்ற காதலியும் தந்தையும்

முச்சக்கரவண்டியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை 18 வயது இளைஞனை கடத்திச் சென்ற சந்தேகத்தின் பேரில் அவரது 17 வயது காதலி மற்றும் காதலியின் தந்தை ஆகியோர் அகலவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மஹகம பொலேகொட பிரதேசத்தில் வசிக்கும் இளைஞனே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டியை பழுது பார்ப்பதற்காகச் சென்ற வேளையிலேயே அவர் தாக்கப்பட்டு கடத்தப்பட்டதாக முறைப்பாடளிக்கப்பட்டு்ள்ளது.

குறித்த முறைப்பாட்டிற்கமைய விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார்ர் கடத்தப்பட்ட இளைஞனை அவரது காதலியின் வீட்டில் கண்டுபிடித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த இளைஞனை பொலிஸார்ர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன், இளைஞனின் காதலியும், காதலியின் தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.