சகோதரியை கொலை செய்த 3 வயது சிறுமி

சகோதரியை கொலை செய்த 3 வயது சிறுமி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனது சகோதரியை சிறுமி ஒருவர் கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

ஹூஸ்டன் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒரு குடும்பத்தினருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களது வீட்டுக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர் வந்திருந்தனர்.

உறவினர்களுடன் அமர்ந்து பெற்றோர் பேசிக்கொண்டிருந்த நிலையில் 2 குழந்தைகளும் வேறொரு அறையில் விளையாடிக் கொண்டிருந்தனர். 3 வயது பெண் குழந்தை வீட்டில் கீழே கிடந்த துப்பாக்கியை எடுத்து விளையாடிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் திடீரென துப்பாக்கியில் இருந்து குண்டு வெடித்தது.

அவர்களது 4 வயது பெண் குழந்தை குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர். செல்லும் வழியிலேயே அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூடு சம்பவம் தற்செயலாக நடந்ததாக சொல்லப்படுகின்றது.

துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஏதேனும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுமா என்பது குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்