இத்தாலி நடுக்கடலில் 1,000 அகதிகள் மீட்பு

இத்தாலி நடுக்கடலில் 1,000 அகதிகள் மீட்பு

துருக்கி, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் சட்ட விரோத பயணம் மேற்கொண்டு ஐரோப்பிய நாடான இத்தாலிக்கு அகதிகளாக தஞ்சம் அடைகின்றனர்.

இத்தாலிக்கு வந்து கொண்டிருந்த அகதிகளின் படகு ஒன்று நடுக்கடலில் சிக்கிகொண்டுள்ளது, இதனையடுத்து கடற்படையினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றதன் பின் அவ்விடத்துக்கு விரைந்து சென்ற கடற்படையினர் நடுக்கடலில் படகுகளில் சிக்கித்தவித்த அகதிகளை மீட்டனர்.

இதுவரை 1,000-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்