படகு விபத்தில் 21 பேர் பலி

படகு விபத்தில் 21 பேர் பலி

ஏமனின் வடமேற்கு பகுதியில் ஹொடைடா துறைமுக நகர பகுதியில் படகு ஒன்று நீரில் மூழ்கியதால் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

படகு ஒன்றில் திருமண நிகழ்வொன்றுக்கு 27 பேர் சென்றிருந்த நிலையில் திடீரென கடலில் வீசிய பலத்த காற்றினால் படகு நீரில் மூழ்கியுள்ளதுடன் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 12 பெண்கள், 7 சிறுவர்கள் மற்றும் 2 ஆண்கள் அடங்குவர்.

குறித்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அந் நாட்டு பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்