நகைக் கடையில் நெக்லஸை திருடிய எலி – வீடியோ இணைப்பு –

 

கேரளா மாநிலம் காசர்கோடு பகுதியில் உள்ள பிரபல நகைக்கடையில் விற்பனைக்காக ஏராளமான நெக்லஸ்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில் , காட்சி பெட்டியில இருந்த ஒரு நெக்லஸ் காணாமல் போயிருந்தது.

அதிர்ச்சியடைந்த நகைக்கடை ஊழியர்கள் மற்றும் கடை உரிமையாளர் கடையின் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காத நிலையில் எவ்வித சேதமும் இல்லாம் எப்படி காணாமல் போனது என்பதில் பல்வேறு நபர்கள் மீதும் சந்தேகம் ஏற்பட்டது.

இந்த நிலையில் கடையில் இருந்த சிசிடிவி கமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போதுதான் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பதிவில் நள்ளிரவு கடையின் சீலிங் வழியாக உள்ளே புகுந்த எலி நெக்லெஸை தனது வாயால் தூக்கி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.

இந்நிலையில், நகைக்கடையில் நகையை திருடிய எலி தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் “எலி திருடனை கவனமாக பாருங்கள்” என்ற வாசகத்துடன் அந்த நெக்லெஸை தூக்கி செல்லும் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகின்றது.