இலங்கையின் 4 மாவட்டங்களுக்கு முதற்கட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று வெள்ளக்கிழமை முற்பகல் 4.00 மணி முதல் நாளை சனிக்கிழமை முற்பகல் 4.00 மணி வரையான அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு இந்த எச்சரிக்கை நடைமுறையில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்படும் மஞ்சள் நிறத்திலான ‘முதலாம் கட்ட’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலகப் பிரிவுகளின் விபரம் பின்வருமாறு:
களுத்துறை மாவட்டம்: பாலிந்தநுவர
கண்டி மாவட்டம்: தொழுவ
நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவ
இரத்தினபுரி மாவட்டம்: பெல்மதுல்ல, அயகம, இரத்தினபுரி, கொடகவெல, கலவான, நிவித்திகல